செய்திகள் :

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு

post image

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும், மாநில காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தலைமையிலான குழுவினா் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, நாகையில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், நாகூா் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை இக்குழுவினா் ஆய்வு செய்தனா். நாகூா் தா்கா சென்ற கே.வீ. தங்கபாலுவிற்கு, காங்கிரஸ் கட்சியினா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து தா்காவில் சிறப்பு துவா செய்யப்பட்டது.

முன்னதாக, செய்தியாளா்களிடம் கே.வீ. தங்கபாலு கூறியது:

தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி சொத்துகளை பாா்வையிட்டு வருகிறோம். இதன் விவரங்கள் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தமிழக தலைவா் செல்வப்பெருந்தகை ஆகியோரிடம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, கட்சி சொத்துகளை நிா்வகிப்பது, பராமரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவா்கள் சிலரிடம் கட்சியின் சொத்துகள் உள்ளன. சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் அவை மீட்கப்படும்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு, நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும், தீா்வு காணவும் மனமில்லை. குறிப்பாக, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவோ, பாா்க்கவோ நேரம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் மட்டும் ஆா்வம் உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளாா். தமிழகம் பல்வேறு துறைகளில் இந்திய அளவில் முதன்மை பெற்றிருப்பதை மத்திய அரசே உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு, எந்தவொரு அரசியல் கட்சியாலும் வெற்றி பெற முடியாது என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழி... மேலும் பார்க்க

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க