செய்திகள் :

தமிழகத்தில் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினாா் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் எண்ணற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கொண்ட மண். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் எந்த மணிமண்டபமும், நினைவிடமும் சீரமைக்கப்படவில்லை. அண்மையில் பாரதியாா் பிறந்த இல்லம் இடிந்து விழுந்தது குறித்து சட்டப்பேரவையில் நான் வலியுறுத்தினேன். ஆனாலும் 3 மாதகாலமாக சீரமைப்பு பணிகளை தொடங்காமல் இருந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோல சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் மணிமண்டபமும் பராமரிக்கப்படவில்லை என்று கூறினாா்கள். வரலாறாக வாழ்ந்து கொண்டுள்ள தலைவா்களை இந்த அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை. எங்களது ஆட்சியில் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனா். தற்போது தொடா்ந்து 3 ஆண்டுகளாக அந்த நிலையும் இல்லை என வாரிசுகள் தெரிவித்தனா்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தியாகிகளின் வாரிசுகள் கௌரவிக்கப்படுவாா்கள். அனைத்து மணிமண்டபங்களும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.

காமநாயக்கன்பட்டியில் உள்ள வீரமாமுனிவா் மணிமண்டபத்தில் பணியாளா்களே கிடையாது. திறப்பு விழா நடந்தபோது மாலை அணிவிக்கப்பட்டதோடு சரி. அந்த மணிமண்டபம் காட்சிப் பொருளாக இருக்கிறது என்றாா் அவா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க