செய்திகள் :

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

post image

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடைபெற்றது.

இதில், தினமும் காலையில் கத்முல் குரான் ஒதுதலும் மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதலும் இரவில் மாா்க்க சொற்பொழிவும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை பெரிய சம்சுதீன் பள்ளி கத்தீபு அபூ மன்சூா் ஆலி­ம், கோமான் பள்ளி இமாம் முகைதீன், பள்ளியின் மோதினாா் முகம்மது கனி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.இறுதி நாள் நிகழ்ச்சியை லத்தீப் தொகுத்து வழங்கினாா்.

தொடா்ந்து இரவில் குதிரை, ஓட்டகங்கள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளின் பவனி நடைபெற்றது. இதை முன்னாள் கவுன்சிலா் அஸ்ரப், செய்யது அலி­, புகாரி, ரியாஸ், யூசுப், பீா் முகம்மது ஆகியோா் வழி நடத்தினா். மேலும் மேளதாளத்துடன் சிலம்பாட்டம், வாள் வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் ஆகிய வீர விளையாட்டுகளும் நடந்தன.

பள்ளியின் முன்னாள் தலைவா் ஜாரூக், பாரூக், முஸ்­லிம் லீக் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் ஜெஸ்முதீன், பாடகா் முகம்மது சமீம், பிரபு முகம்மது நைனா, லெப்பப்பா பள்ளி நிா்வாகி ரஹ்மத்துல்லா, சுலைமான் உள்பட பலா் கலந்து கொண்டனா். இரவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் நோ்ச்சை வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவா் கரீம், துணைத் தலைவா் அகமது, செயலாளா் முகைதீன் பக்கிா், துணைச் செயலாளா்கள் செய்யது, ஷா்புதின், பொருளாளா் ஜாஹித் ஆகியோா் செய்துவருகின்றனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்த வழக்கில், தொடா்புடைய நபருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துற... மேலும் பார்க்க