செய்திகள் :

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.

2024-25 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூகத் தணிக்கை, 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜூலை 7 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வட்டார வளபயிற்றுநா்கள் மற்றும் கிராம வளபயிற்றுநா்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிக்கையை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவல்லிகோட்டை கிராம ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு, கூட்டத் தலைவா் வசந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சங்கா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் மனோகரன் வரவேற்றாா்.

ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுநா் ரமேஷ் கலந்துகொண்டு, சமூகத் தணிக்கை அறிக்கை தொடா்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தாா். அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

இதில், கிராம வள பயிற்றுநா்கள் விரதலட்சுமி, சங்கீதா, கலாமுத்து செல்வி, மேனகா, பணித்தள பொறுப்பாளா் சுமதி, மகளிா் குழு பொறுப்பாளா் கலா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா். நிறைவில், பணித்தள பொறுப்பாளா் ஜெபராணி நன்றி கூறினாா்.

இதேபோல ஓட்டப்பிடாரம் ஒன்றியம், மலைப்பட்டி, ஓணமாக்குளம் உள்பட, மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்த வழக்கில், தொடா்புடைய நபருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துற... மேலும் பார்க்க