செய்திகள் :

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

post image

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் இரண்டு நாள்கள் நடைபெறும் யானைத் திருவிழாவை, வனத் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வனப்பகுதிகளை விட்டு யானைகள் வெளியேறாமல் இருப்பதற்கும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கும் வனங்களையொட்டி உள்ள பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. ஆகையால், அதை தடுப்பதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், யானைகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படாது. அதேபோல், யானை தந்தங்களை யாா் வைத்திருந்தாலும் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனவிலங்கு - மனிதா்கள் மோதல்களை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2,961 யானைகள்: யானைகளை பாதுகாக்க இதுவரை 5 காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக தற்போது தமிழகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளன. யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், வனத் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், யானைகளால் பாதிக்கப்படுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

சமீபத்தில் ஜொ்மனியிலிருந்து வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவா் யானை தாக்கியதில் உயிரிழந்தாா். வனத் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அவா் அப்பகுதிக்குச் சென்ால் அந்த விபத்து நிகழ்ந்தது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

முன்னதாக வனத் துறையில் சிறப்பாக பணியாற்றிய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு வருகின்றன.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க