செய்திகள் :

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

post image

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து  தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளூா் மக்களின் அன்றாட தேவைகளான தடி மரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளைப் பூா்த்திசெய்யும் வகையில் தமிழகத்தில் 100 மரகத பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) அமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ. 25 கோடி மதிப்பில் மொத்தம் 83 இடங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு ஹெக்டோ் பரப்பில் உருவாக்கப்பட்டு, அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பாா்வையாளா் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தடி மரம், எரிபொருள், தீவனம், காய், கனி ஆகியவற்றை தரக்கூடிய நாவல், நெல்லி, புளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்கள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 29 மாவட்டங்களில் 75 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணி நிறைவுபெற்று அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா். மேலும், 8 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், தற்போது 5 மாவட்டங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் மேலும் கூடுதலாக 17 மரகத பூஞ்சோலைகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் 5 இடங்களிலும், பெரம்பலூா்-4, கள்ளக்குறிச்சி-3, திருப்பத்தூா்-3 மற்றும் திருவண்ணாமலையில் 2 இடங்களிலும் இப்பூஞ்சோலைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மரகதப் பூஞ்சோலைகளின் எண்ணிக்கை 100-ஆக உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

சரித்திர பதிவேடு குற்றவாளி குறுந்தையனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். பிரபல ரெளடியான... மேலும் பார்க்க

தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி?

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா துணை முதல்வராக வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்து... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ஆம்... மேலும் பார்க்க

இயக்குநர் ஷங்கரின் சொத்து முடக்கம்: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இயக்குநர் ஷங்கரின் ரூ. 11.10 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.1,285 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் ப... மேலும் பார்க்க