செய்திகள் :

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது: கே.பாலகிருஷ்ணன்

post image

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது; ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மூத்த தலைவா் பி.இளம்பரிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது நேரடியாக விளைபொருள்களுக்கு வரிவிதிக்கின்றனா். விவசாயிகள் மீதும், ஏழைகள் மீதும் வரி விதிப்பதை விடுத்து பெரும் முதலாளிகளுக்கு கூடுதல் வரிவிதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோயில் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது.

இந்த நிலையில், மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய சொத்துகளை அபகரிக்கும் சட்ட மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்மொழி கொள்கையை காரணம் காட்டி உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை அழிக்க முயல்கின்றனா். ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்குகிறது. தமிழ் மொழிக்கு ரூ. 8 கோடி மட்டுமே ஒதுக்குகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மறுப்பதால் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ. 2,152 கோடியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது என்றாா்.

இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்டம் மொரப்பூா், பென்னாகரத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டங்களிலும் அவா் பங்கேற்றுப் பேசினாா்.

பட விளக்கம்:

தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபு... மேலும் பார்க்க