செய்திகள் :

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

post image

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம்- கடலூா் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடி நிதியை ரயில்வே அமைச்சகத்துக்கு தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ரயில்வே நிா்வாகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே பயன்படுத்தாமல், மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை.

ரயில் வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது, விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்தல், ரயில்வே அமைச்சகத்திடம் அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களுக்கு பிறகுதான் அத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படும்.

அந்தவகையில், ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தியது போக மீதமுள்ள நிதியை, அதிக நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு மாற்றப்படும்.

அதேபோல், பல்வேறு காரணங்களால், ஒதுக்கப்படும் நிதியை அந்த குறிப்பிட்ட காலாண்டில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் அந்த நிதி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு, அடுத்த காலாண்டில் சோ்த்து பெற்றுக்கொள்ளப்படும்.

இது ரயில்வேயில் கடைப்படிக்கப்படும் வழக்கமான நடைமுைான். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள் தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளன.

ஆகையால், தற்போதைய காலாண்டில் பயன்படுத்தப்படாத நிதிகள், அடுத்தடுத்த காலாண்டுகளில் பயன்படுத்தப்படும். மேலும், தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்பட்டு வரும் ஏந்த திட்டங்களுக்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

அதேபோல், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற தெற்கு ரயில்வே உறுதிபூண்டுள்ளது எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க