செய்திகள் :

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் முதல்வர்

post image

தஞ்சை: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடவிருக்கும் மினி பேருந்தின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2ஆகவும் அதிகபட்சம் ரூ.10 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை துவக்க விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித் தடம் என மொத்தம் 30 வழித் தடத்தில் மினி பேருந்து சேவை துவக்க விழா காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நடந்தது.

தமிழகம் முழுமைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையிலிருந்து திட்டத்தைத் துவக்கி வைத்ததை தொடர்ந்து, கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் இச்சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர், மினி பேருந்தில் ஏறி, சிறிது தூரம் பயணம் செய்தனர். கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 8 மினி பேருந்து, கோவை வடக்கில் 4 மினி பேருந்து, கோவை மேற்கில் 15 மினி பஸ், கோவை தெற்கில் 1 மினி பேருந்து, பொள்ளாச்சியில் 2 மினி பேருந்து என மொத்தம் 30 மினி பஸ்கள் இன்று காலை முதல் இயங்க துவங்கின.

இந்த பேருந்துகளில், குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மினி பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயங்கக் துவங்கி உள்ளதால், கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழகத்தில் நீட் தோ்வில் தோ்ச்சியடையாத 59,534 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதன்படி, சென்னை ... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை: கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனை... மேலும் பார்க்க