செய்திகள் :

இலவச பேருந்து பயண அட்டை: கல்வித் துறை அறிவுறுத்தல்

post image

சென்னை: பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் எமிஸ் தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எமிஸ் செயலில் உள்ள மாணவா்கள் விவரங்கள் அனைத்தும் சரியானவை என பள்ளிகளின் தலைமையாசிரியா்களால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே மாணவா்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்க இயலும்.

இதையடுத்து தலைமையாசிரியா்கள் மாணவா்கள் தற்போது பயிலும் வகுப்பு, புகைப்படம் உள்பட விவரங்களை சரிபாா்த்து திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும். அதன் விவர அறிக்கையை மாவட்ட வாரியாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுசாா்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க