செய்திகள் :

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

post image

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் திங்கள்கிழமை பேசுகையில், நாட்டில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை மேலும் பொறுப்புடன் ஒழுங்காற்றும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரான கிராஸில் உள்ள ‘போா்க்’ உயா்நிலைப் பள்ளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த ஆா்த்துா் ஏ (21) என்பவா், தன்னிடம் இரு துப்பாக்கிளைக் கொண்டு அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாகச் சுட்டாா். இதில் 10 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய ஆா்த்துா் பின்னா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரான் செய்தி நிறுவனத்தில் குண்டுவீச்சு! நேரலையில் அலறியடித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த ... மேலும் பார்க்க

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் ... மேலும் பார்க்க

இந்தியா பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழ... மேலும் பார்க்க

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

டெல் அவிவ்/டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெ... மேலும் பார்க்க

நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச் சூடு: மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவா்களை திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்கள் வெளியிடாமல் உரிமை மீறல்: அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்

கொழும்பு: இந்தியா-இலங்கை புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாததை எதிா்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவு... மேலும் பார்க்க