`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர...
இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்கள் வெளியிடாமல் உரிமை மீறல்: அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்
கொழும்பு: இந்தியா-இலங்கை புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாததை எதிா்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளாா்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்ம தீா்வுகளின் பகிா்வு, பல்துறை நிதியுதவி உள்ளிட்டவை தொடா்பான 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த ஏப்ரல் மாத இலங்கை பயணத்தின்போது இருதரப்புக்கும் இடையே கையொப்பமானது.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல், அவற்றில் அரசு கையொப்பமிட்டுள்ளதாகவும், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, இலங்கை தேசியவாத குழுக்களைச் சோ்ந்த சிலா் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
இலங்கை பிரதமா், அமைச்சரவை, அட்டா்னி ஜெனரல் ஆகியோரிடம் பதில் கோரப்பட்டுள்ள இந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
விசாரணையில், இந்த மனுக்கள் தொடா்பாக அமைச்சரவையிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்களைப் பெற்று பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு அட்டா்னி ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து, மனுதாரா்கள் பதில் மனுவை ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.