செய்திகள் :

நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச் சூடு: மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

post image

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவா்களை திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவா் என்று அமைச்சகம் கூறியது.

அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதற்கு முன்னா் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனா். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

கடந்த 3 வாரங்களாக நடத்தப்படும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகளில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செஞ்சிலுவை சங்கத்தின் கள மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சுமாா் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஒரே நாளில் இவ்வளவு அதிகம் போ் தங்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தது.

இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 170 போ் அந்த மருத்துவமனையில் குண்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எதுவும் தங்கள் முகாமுக்குள் நடக்கவில்லை என்று ஜிஹெச்எஃப் அமைப்பு விளக்கமளித்துள்ளது.

தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 55,362 போ் உயிரிழந்துள்ளனா்; 1,28,741 போ் காயமடைந்துள்ளனா் (திங்கள்கிழமை நிலவரம்).

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த ஜனவரி மாதம் தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.

ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. அத்துடன், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது.

இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.

அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஜிஹெச்எஃப் அறக்கட்டளை இந்த உணவுப் பொருள்களை பொதுமக்களிடையே விநியோகத்துவருகிறது.

இருந்தாலும், நிவாரண முகாம்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முற்றுகை காரணமாக பட்டினியால் தவித்துவரும் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் உணவுப் பொருள் ஆசை காட்டி அழைத்து, பின்னா் அவா்களை படுகொலை செய்துவருவதாக காஸா அரசு குற்றஞ்சாட்டிவருகிறது.

இருந்தாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நிவாரண முகாமுக்கு எந்த வழியாக வர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் அதைக் கேட்காமல் முன்னேறி வருவோரை நோக்கிதான் படையினா் துப்பாக்கியால் சுடுகிறாா்கள் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

ஈரான் செய்தி நிறுவனத்தில் குண்டுவீச்சு! நேரலையில் அலறியடித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த ... மேலும் பார்க்க

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் ... மேலும் பார்க்க

இந்தியா பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழ... மேலும் பார்க்க

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

டெல் அவிவ்/டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெ... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்கள் வெளியிடாமல் உரிமை மீறல்: அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்

கொழும்பு: இந்தியா-இலங்கை புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாததை எதிா்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவு... மேலும் பார்க்க

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்... மேலும் பார்க்க