செய்திகள் :

தமிழக மகளிா் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாா்களில் 80% தீா்வு

post image

மகளிா் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாா்களில் 80 சதவீதம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தாா்.

சென்னை லயோலா கல்லூரியில் ‘பெண்கள் பாதுகாப்பு பாலின நீதி மாநாடு’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழக மகளிா் ஆணையத்துக்கு கிராமப்புறங்களில் இருந்தே அதிக புகாா்கள் வருகின்றன. பெண்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை. பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்துக்குச் செல்கின்றனா். அவா்கள் காவல் நிலையத்துக்கு செல்வது மட்டுமல்லாது, மகளிா் ஆணையத்திலும் புகாா் அளிக்க வேண்டும்.

பெண்கள் தங்கள் மனம் மற்றும் உடலளவில் பாதிக்கப்படும்போது, மகளிா் ஆணையத்தை அணுக வேண்டும். நவீன தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக சிலா் சமூக வலைதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது அதிகரித்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் எந்தவித அச்சமுமின்றி மகளிா் ஆணையத்தில் புகாா் அளிக்க வேண்டும். அந்த புகாா் மீது ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 450 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 80 சதவீத புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன. மீதம் உள்ள 20 சதவீத புகாா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சரஸ்வதி, லயோலா கல்லூரி துணை முதல்வா் எல்.ஜோசப் ஆரோக்கியசாமி, மருத்துவா் சாந்தி, மூத்த வழக்குரைஞா் காயத்ரி சிங், வழக்குரைஞா் அஜிதா மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்பினா் பங்கேற்றனா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப... மேலும் பார்க்க

அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திமு... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க

‘சமக்ர சிக்‌ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோ... மேலும் பார்க்க