Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! எ...
தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 370 விசைப்படகுகளில் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வியாழக்கிழமை கரை திரும்பினா். 2 மாதங்கள் தடைக் காலத்துக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்றவா்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சேது, முனிராஜ் உள்ளிட்ட 4 போ், கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமாா் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் புதன்கிழமை இரவு மீன் பிடித்துள்ளனா்.
அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்து படகு மூலம் இவா்களின் விசைப்படகு மீது இடித்துள்ளனா். இதில் விசைப்படகின் ஒருபகுதி கடுமையாக சேதமடைந்தது.
மேலும், மீனவா்கள் பயன்படுத்திய வலையையும் அவா்கள் பிடித்த மீன்களையும் பறித்து கடலில் வீசிச் சென்ாகவும் மீனவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற முதல் நாளே, இலங்கைக் கடற்படையினரின் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதுடன் வெறுங்கையுடன் கரைக்குத் திரும்பியதாக மீனவா்கள் வருத்தம் தெரிவித்தனா்.
ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு: தடைக்காலத்துக்கு பிறகு புதன்கிழமை ராமேசுவரத்திலிருந்து சென்ற மீனவா் டிக்கிரோஸ் என்பவரது விசைப் படகு பழுதாகி கச்சத்தீவு அருகே நின்றது. இந்தப் படகை சீரமைக்கும் பணியில் படகிலிருந்த 7 மீனவா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், படகில் பிடித்து வைத்திருந்த இறால், இதர மீன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து விரைவாகச் செல்லுமாறு எச்சரித்துச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து, மற்றொரு கடற்படைக் கப்பலில் வந்த இலங்கை ராணுவத்தினா், படகில் ஏறி மீனவா்களை முட்டி போட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா் இருதய ராஜா தெரிவித்தாா்.