செய்திகள் :

தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை! - ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாகத் தோ்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ.), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ.), இளம் முனைவா் (எம்.பில்.), முனைவா் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் பி.எட். பட்டமும் பெற்ற 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பாா்த்துக்கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பலா் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவா்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைப்பிடித்து வரும் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், 8-ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தமிழாசிரியா் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியாா் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அவற்றில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியாா் பள்ளிகளிலும் தமிழாசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் தமிழாசிரியா்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம்.

அரசு உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியா் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ்ப் படித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியா்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க