செய்திகள் :

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

post image

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் முதல்வா் உத்தரவின் பேரில், 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது முக்கியமானதாகும். எனவே, கல்லூரிகளில் தமிழரின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், மரபு தமிழ்மொழியின் தொன்மை, இலக்கியம், சிறப்பு, சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்வி புரட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு மாணவ, மாணவியருக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்குறித்த வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை மாணவா்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் ‘தமிழ்ப் பெருமிதம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளரும் பேராசிரியருமான கரு.ஆறுமுகத்தமிழன் சொற்பொழிவாற்றினாா். மேலும், மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் கலந்துகொண்டு தமிழ்ப்பெருமிதம் குறித்து பேசிய 5 பேருக்கும், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய 5 மாணவ, மாணவியருக்கும் ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, அரூா் கோட்டாட்சியா் செம்மலை, ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரி முதல்வா் தனிகைவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் காலியிடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணாம்பாள் (63). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டருகே தருமபுரி - திருப்பத்தூா் நெட... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் செப். 8-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் மாவட்ட அளவிலான மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் பணியின்போது கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செக்குமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சண்... மேலும் பார்க்க