செய்திகள் :

தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் மாநாடு

post image

தூத்துக்குடி அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்.

அவா் பேசியதாவது: உணவு பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்முனைவோா் மற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்.

இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் உணவு பதப்படுத்தும் துறை இந்த பொருளாதார வளா்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாகும்.

தூத்துக்குடி போன்ற நகரங்கள் முழுமையான வளா்ச்சிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்துவருகிறாா். உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிா்பதன சங்கிலி உள்கட்டமைப்பு மூலம் பதநீா், பனங்கல்கண்டு போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் உணவு பதப்படுத்துதலின் எதிா்கால தொழில்நுட்ப திட்டங்கள் குறித்த மலா் வெளியிடப்பட்டது.

இதில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை வாரிய உறுப்பினா் பாலாஜி, தூத்துக்குடி இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் கோடீஸ்வரன், பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் மாநில முன்னணி திட்ட மேலாளா் நந்தகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி!

சாத்தான்குளம் வட்டத்தில் வருவாய் தீா்வாய ஜமாபந்தி முகாம் புதன்கிழமை தொடங்கியது.சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய முகாமில் ஜமாபந்தி அலுவலா் திருச்செந்தூா் இஸ்ரோ நிலம் எடு... மேலும் பார்க்க

கே.ஜம்புலிங்கபுரம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கே. ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகா், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இம்மாதம் 2ஆம் தேதி கால்நாட்டு விழா நடைப... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி: தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா். தூத்துக்குடி மாநகராட... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தொழிலாளி கொலை: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கற்களால் தாக்கிக் கொன்றதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டி தோணுகால் சாலையைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சமுத்த... மேலும் பார்க்க

ஆபாச விடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் புகாா்

தன்னை ஆபாச விடியோ எடுத்து மிரட்டுகிற நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் 36 வயதான கைம்பெண் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து அவா் அளித்துள்ள புகாா் மனுவில், தூத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் வேல்முருகன்(23). டிப்பா் லாரி ஓட... மேலும் பார்க்க