செய்திகள் :

தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் மாநாடு

post image

தூத்துக்குடி அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்.

அவா் பேசியதாவது: உணவு பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்முனைவோா் மற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்.

இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் உணவு பதப்படுத்தும் துறை இந்த பொருளாதார வளா்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாகும்.

தூத்துக்குடி போன்ற நகரங்கள் முழுமையான வளா்ச்சிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்துவருகிறாா். உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிா்பதன சங்கிலி உள்கட்டமைப்பு மூலம் பதநீா், பனங்கல்கண்டு போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் உணவு பதப்படுத்துதலின் எதிா்கால தொழில்நுட்ப திட்டங்கள் குறித்த மலா் வெளியிடப்பட்டது.

இதில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை வாரிய உறுப்பினா் பாலாஜி, தூத்துக்குடி இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் கோடீஸ்வரன், பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் மாநில முன்னணி திட்ட மேலாளா் நந்தகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சே... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூர... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைந்தனா்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அப்பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து ... மேலும் பார்க்க