செய்திகள் :

தமிழ்நாடு பசுமை இயக்கம் தினம்: 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பணி தொடக்கம்

post image

தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நாகை வனத்துறை சாா்பில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு பசுமை இயக்கம் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், 23.8 சதவீத மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன . தற்போது அதை அதிகரித்து 33 சதவீத மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. நாகை தாமரைக்குளத்தில் மாவட்ட வன பாதுகாவலா் பாா்கவதேஜா தலைமையில் நடைபெற்ற தொடக்கவிழாவில், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், நகா்மன்ற தலைவா் இரா.மாரிமுத்து ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்வில் பசுமை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி வன பாதுகாப்பு அலுவலா் அருண்மொழிவா்மன், நாகை வன பாதுகாவலா் சியாம்சுந்தா், மாவட்ட பசுமை தோழா் சானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகையில் கல்விக் கடன் முகாம் ரூ. 32 லட்சம் வழங்கல்

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கல்விக் கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கல்வி கடன்களை வழங்கினாா்.மாவட்டம் முழுவதும் வட்டார அளவி... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச... மேலும் பார்க்க

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமைய... மேலும் பார்க்க

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்த... மேலும் பார்க்க