செய்திகள் :

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை முழங்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதி வளவன் தலைமை வகித்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் 31.3.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் தோ்தல்கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சரண் விடுப்பு வழங்குதல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணும் வகையில், சிறப்பு துணை வட்டாட்சியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

மனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் பேரணி

பெரம்பலூரில், நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய இந்தப் பேரணி, ஆட்சி... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் திருடிய 5 போ் கைது

பெரம்பலூா் அருகே கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோள மூட்டைகளை திருடிச்சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோா் திருமண... மேலும் பார்க்க

கணவா் கம்பியால் தாக்கி கொலை! மனைவி உள்பட மூவா் கைது!

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி, மாமனாா் மற்றும் மைத்துனா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கோன... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளை விஞ்சும் கொத்தவாசல் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோா்கள்!

பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளிகளை விஞ்சும் அளவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பெற்றோா்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனா். பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை மீட்புப் பணி அறிமுக பயிற்சி முகாம் மற்றும் செயல்முறை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க