செய்திகள் :

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

post image

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 1.14 கோடி தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்குவதால் இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கை உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக வகுக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம், சுமாா் 2.60 லட்சம் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது.

40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியையும் வேகப்படுத்தி வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். தொழில் துறையின் பல்வேறு திட்டங்கள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈா்த்துள்ளதுடன், தொழில் வளா்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

ஓய்வூதியத்திட்டம் ஆய்வு: தமிழ்நாடு போன்ற வளா்ச்சி அடைந்த மாநிலங்களில் நிதிப் பகிா்வு குறித்த நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசின் 16-ஆவது நிதிக் குழுவிடம் கோரிக்கை மனுவாக அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று எதிா்நோக்கியுள்ளோம். மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார அறிஞா்கள் ரகுராம் ராஜன், எஸ்தா் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க