செய்திகள் :

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

post image

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடன் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

நீட் தேர்வைக் கொண்டு வந்து திமுக தான் துரோகம் செய்தது என்று அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து உங்களது கருத்து...

அதிமுகவிற்கு தைரியம் இருந்தால் நீட் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச சொல்லுங்க.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

"2026-ம் ஆண்டு தேர்தலில் திமுகவை இறைவன் வீட்டிற்கு அனுப்புவான்" என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே...

பாவம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மீண்டும் தற்போது நடந்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும், நீட் தேர்விற்கு திமுக தான் காரணம் என்று அதிமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க