"கேரளா மக்களுக்கு பெருமை" - உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி வி...
``தமிழ், தமிழ் என பேசும் அமித் ஷா கீழடி ஆய்வறிக்கையை இதுவரை அங்கீகரிக்காதது ஏன்?'' - ஆ.ராசா கேள்வி
திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆர் ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி, மகாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சு குறித்து பேசிய ஆ. ராசா, “ஊழல் எதிர்ப்பு என்பதை மட்டுமே சித்தாந்தமாகக் கொண்டதால் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார்.
திமுகவிற்கு பின்னால் வலிமையான சித்தாந்தம் இருக்கிறது. டெல்லியுடன் தமிழ்நாட்டை ஒப்பிடக்கூடாது. தேர்தல் வாக்குறுதி தொடர்பான விவாதத்திற்கு நாங்கள் தயார். அமித்ஷா தயாரா?
மதவாத பிளவை உண்டாக்கி கலவரத்தை தூண்டப் பார்க்கிறார் அமித்ஷா. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வரலாற்றிலேயே இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கு மத்திய அரசு அவ்வளவு நிதி ஒதுக்குகிறது. தமிழ் தமிழ் என பேசும் அமித்ஷா கீழடி ஆய்வறிக்கையை இதுவரை அங்கீகரிக்காதது ஏன்?

பேசாத சமஸ்கிருதம், இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை வளர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தென் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி எந்த ஒரு மசோதாவையும் சட்டமாக்கும் வகையில் சதி நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோமா? என்று கேட்கும் நிலையில் இருக்கிறோம். 2026 தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் தண்டனைத் தருவார்கள்” என்று பேசியிருக்கிறார்.