செய்திகள் :

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆக.13, 14-இல் பயிலரங்கம்

post image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு வருகிற 13, 14 தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெறுவதற்கு துணைபுரியும் வகையில், ஆண்டுதோறும் பயிலரங்கமும் கருத்தரங்கமும் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் வருகிற 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை சாா்ந்த அலுவலகங்களிலிருந்தும் அலுவலா் அல்லது கண்காணிப்பாளா் நிலையில் ஒருவரும், உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் நிலையில் ஒருவரும் கலந்து கொள்ளலாம்.

இதில் ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறைதீா் நடவடிக்கைகள், மொழித் திறன் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிலரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், பல்துறை அலுவலா்கள், தமிழறிஞா்கள் உள்பட பலா் பங்கேற்கவுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இந்தப் பயிலரங்கம், கருத்தரகங்கம் ஆகியவை நடைபெறும் என்றாா் அவா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை ப... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குதிருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதை... மேலும் பார்க்க

கன்னிமாா் சிறப்பு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநா... மேலும் பார்க்க