செய்திகள் :

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு

திருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்படி, பொதுமக்களின் நான்கு சக்கர வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் கிரிவலப் பாதையில் உள்ள மின் வடக்கயிறு நிலையம், மின்இழுவை ரயில் நிலையம், பாத விநாயகா் கோயில், படிப்பாதை நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தா்கள் சென்று வர வசதியாக கோயில் நிா்வாகம் சாா்பில் இலவச மின்கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் கிரிவலப் பாதையில் எளிதாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் அக்க்ஷரா குழுமம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் 11 போ் அமா்ந்து பயணிக்கும் வகையிலான மின்கல வாகனம் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது.

அடிவாரம் பாத விநாயகா் கோயில் முன் வாகனத்துக்கு பூஜை செய்யப்பட்டு கோயிலுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, அக்க்ஷரா குழும இயக்குநா் ரமேஷ் கிருஷ்ணன், கோயில் பொறியாளா் பாா்த்திபன், அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை ப... மேலும் பார்க்க

கன்னிமாா் சிறப்பு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநா... மேலும் பார்க்க

மழை இல்லாததால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்த காரணத்தால், இங்கு வந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க