செய்திகள் :

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

post image

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை பொன்னகரம் பகுதியிலிருந்து திண்டுக்கல்-நத்தம் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் செல்வம் மீது மோதி விபத்து நேரிட்டது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதில் செல்வம், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குதிருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதை... மேலும் பார்க்க

கன்னிமாா் சிறப்பு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநா... மேலும் பார்க்க

மழை இல்லாததால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்த காரணத்தால், இங்கு வந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க