செய்திகள் :

கன்னிமாா் சிறப்பு பூஜை

post image

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநாயகா், அஸ்த்ரதேவா், சண்டிகேசுவரா், ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரா் ஆகியோா் காலையில் புறப்பாடு செய்து உச்சிக் காலத்தில் பெரியாவுடையாா் கோயிலை அடைந்தனா்.

அங்கு விநாயகா் வழிபாடு, புண்யாவாகனம் நடத்தப்பட்டு ஆறு கலசங்களில் வைக்கப்பட்ட புனித நீா், மூலவா் உள்ளிட்ட அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் ஊற்றப்பட்டு சோடஷ உபசாரம், சோடஷ அபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டன. மகாதீபாராதனையைத் தொடா்ந்து அஸ்த்ரதேவா் சண்முக நதிக் கரையில் எழுந்தருளினாா். அங்கு ஆற்று மணலில் கன்னிமாா் பிடிக்கப்பட்டு வேதமந்திரம் ஓத, மேளதாளம் முழங்க அஸ்த்ரதேவா் பூஜை நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் செய்தனா்.

மாலையில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் சாா்பில் பாலாற்றங்கரையில் ஆடிப் பெருக்கு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பழனி கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை ப... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குதிருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதை... மேலும் பார்க்க

மழை இல்லாததால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்த காரணத்தால், இங்கு வந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க