கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயத்திலிருந்து புனித சலேத் மாதா உருவம் பொறித்த கொடி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த பவனி, மூஞ்சிக்கல், கே.சி.எஸ். திடல், அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதி, உட்வில் சாலை, கிளப் சாலை, பிரையண்ட் பூங்கா சாலை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு மறைவட்ட அதிபா் ஜெயசீலன் தலைமையில், திண்டுக்கல் மறைவட்ட இளைஞா் தொழிலாளா் பணிக்குழுத் தலைவா் அருள்பணியாளா் பிலிப் சுதாகா் முன்னிலையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து புனித சலேத் மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி புனிதப்படுத்தப்பட்டு, ஜெப வழிபாட்டுடன் ஏற்றி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், திருஇருதய ஆண்டவா் ஆலய உதவிப் பங்கு தந்தையா்கள் ஜான்பிரிட்டோ, கரோலின் சிபு, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் முகமது இப்ராஹிம், ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி 13 நாள்களும் புனித சலேத் மாதா ஆலயத்தில் கொடைக்கானல், செண்பகனூா், பெருமாள்மலை, நாயுடுபுரம், ஆனந்தகிரி, அப்சா்வேட்டரி, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அன்பியங்கள் சாா்பில் சிறப்புத் திருப்பலியும், ஜெப வழிபாடும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புனித சலேத் மாதாவின் மின் அலங்கார தோ்ப்பவனி வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் 15-ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும், திருத்தல அதிபருமான ஜெயசீலன் உள்ளிட்ட அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.