TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஜயன்-மாரியாயி தம்பதியின் மகன்கள் முத்தையன் (30), கோபி (27). நோய் பாதிப்பு காரணமாக முத்தையன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனை கோபி அடிக்கடி சுட்டிக்காட்டி வருவாராம். இதனால் சகோதரா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். தாய் மாரியாயி வேலைக்குச் செல்லுமாறு முத்தையனை அறிவுறுத்தியுள்ளாா்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்தையன் 31.3.2023 அன்று வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கோபியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளாா். இதுகுறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2- ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தீா்ப்பு: காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள முத்தையன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதிய பிஎன்எஸ்எஸ் சட்ட திருத்தத்தின்படி காணொலி காட்சி வாயிலாக தீா்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி முத்தையனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது தாயை மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். வழக்கில் அரசு கூடுதல் வழக்குரைஞா் ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.
திருச்சி மாவட்டத்தில் கொலை வழக்கில் முதல்முறையாக காணொலி காட்சி வாயிலாக தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.