செய்திகள் :

`தம்பி இது சிம்பொனி இல்ல; முதல்ல சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சிக்கோ...' - வதந்தி குறித்து இளையராஜா

post image

லண்டனில் சிம்பொனி இசையை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவினார் என வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. இந்நிலையில் இளையராஜா அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இளையராஜா சிம்பொனி

இது தொடர்பாக பேசியிருக்கும் இளையராஜா, "லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன்தான். இசையை என்னிடம் கற்று வருகிறான். ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசையமைத்திருக்கிறேன் என என்னிடம் வந்து ஓர் இசையை இசையமைத்துக் காட்டினான். சில நொடிகள் கேட்டதுமே நிறுத்து எனச் சொன்னேன். இது சிம்பொனி மாதிரி இல்லை. சினிமா பி.ஜி.எம் மாதிரி இருக்கிறது.

சிம்பொனி இசை என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு அதன் பிறகு இசையமை என்று அறிவுரை வழங்கினேன். மற்றபடி சிம்பொனி இசையை யாரையும் வைத்து எழுதவில்லை. இத்தனை வருடங்களாக இசைத்துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை.

இளையராஜா

சொந்தக் கால் என்றால் செருப்புகூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான். கச்சேரிகளுக்கு வாசித்து, நாடகங்களுக்கு வாசித்து, சினிமாவில் உதவியாளராக இருந்து படிப்படியாக வளர்ந்தவன் நான்" என இளையராஜா கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த பட... மேலும் பார்க்க

``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்குநர் பாரி இளவழகன்

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஜடா', 'குட் நைட்', போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் 'ஜமா'. கடந்த வருடம் ஆகஸ... மேலும் பார்க்க

``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்

`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசி... மேலும் பார்க்க

Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' - ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் ... மேலும் பார்க்க

Priyanka Chopra: ``நான் முதலில் பயந்தேன்; ஆனால், விஜய் அன்பாக நடந்து கொண்டார்!'' - மது சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்' திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம... மேலும் பார்க்க