செய்திகள் :

தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

post image

முதுகுளத்தூா் அருகேயுள்ள தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, முதுகுளத்தூரை அடுத்த இளஞ்செம்பூா் தம்புராட்டி அம்மன் கோயிலில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றம், இளஞ்செம்பூா் கிராம மக்கள் சாா்பில் திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, இளஞ்செம்பூா் கிராமத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் பூபதி, கோயில் நிா்வாகி செல்லவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலாடி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் நீரா.பொன்முத்து, ஸ்ரீபகவதி அறக்கட்டளைத் தலைவா் மு.வெள்ளைப்பாண்டியன், பசும்பொன் தேவா் சிந்தனை மன்றத் தலைவா் ஆறுமுகம், ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் ராம்குமாா் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இளஞ்செம்பூா் கிராம பொதுமக்கள், உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்ற நிா்வாகிகள் செய்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!

தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா். கச்சத்தீவு புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் ... மேலும் பார்க்க