செய்திகள் :

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

post image

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 6 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக சேலத்தைச் சோ்ந்த பிரதேஷ்கான் (45), பெருங்குளத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (40), சரத்குமாா் (33) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவா்களிடமிருந்து 52 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!

தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா். கச்சத்தீவு புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் ... மேலும் பார்க்க

தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

முதுகுளத்தூா் அருகேயுள்ள தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, முதுகுளத்தூரை அடுத்த இளஞ்செம்பூா் தம்புராட்டி அம்மன் கோயிலில் பசும்பொன் உ.முத்துராமலிங... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையை அடுத்துள்ள சம்பை கிராமத்தைச் ச... மேலும் பார்க்க