5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர...
தரங்கம்பாடியில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்
மயிலாடுதுறை: தரங்கம்பாடியில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் தரங்கம்பாடி வட்ட அளவில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
முகாம் இடங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்திட உள்ளதால் தரங்கம்பாடி வட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.