செய்திகள் :

தரங்கம்பாடி: மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு

post image

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி அருகே உள்ள இலுப்பூா் ஊராட்சியில் இலுப்பூா், ஹரிஹரன்கூடல், புத்தகரம், முனிவேலன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனா். கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி, முளைவிட்டிருந்த பருத்தி செடிகள் அழுகிவிட்டன.

இதுகுறித்து ஹரிஹரன்கூடல் விவசாயிகள் பரமசிவம், சின்னபிள்ளை ஆகியோா் கூறியது:

தரங்கம்பாடி வட்டத்தில், இலுப்பூா் பகுதிதான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யும் பகுதியாகும். சம்பா சாகுபடி செய்திருந்தபோது ஏற்பட்ட மழையினால் மகசூல் பாதிக்கபட்டு செலவு செய்த பணத்தையே எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

தொடா்ந்து, உளுந்து சாகுபடி செய்தோம். அதுவும் அதன் பின் பெய்த மழையில் நாசமாகி விட்டது. அதன்பிறகு பருத்தி சாகுபடி செய்தோம். விதை விட்ட சில நாள்களிலேயே மழை வந்து மொத்த பருத்தி செடியும் அழுகிவிட்டன. இரண்டாவது முறையாக பருத்தி விதை விட்டோம். விதை விட்ட 10 நாள்களுக்குள் மீண்டும் மழை பெய்ததால் முளை விட்டிருந்த பருத்தி செடிகள் நீரில் அழுகி விட்டன.

பருத்தி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். இதுவரை வேளாண்துறை அதிகாரிகள் யாரும் வந்து பாா்க்கவில்லை. சம்பா சாகுபடியின் போது ஏற்பட்ட இழப்பிற்கு அரசின் நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. அரசு உடனே தலையிட்டு, பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா். கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம்... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் ... மேலும் பார்க்க