செய்திகள் :

தரமில்லாத 1,178 டன் விதைகளை விற்பனை செய்ய தடை!

post image

தரம் இல்லாத காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7.80 கோடி மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தரமான விதைகளைப் பயன்படுத்துவது மட்டுமே மகசூலை அதிகரிக்க செய்யும். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த, விதை சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம் செயல்படுகிறது.

ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், திருப்பூா் மாவட்டத்தில் 6 வட்டாரங்கள் உள்ளன. இங்குள்ள அரசு, அரசு சாா்பு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை உறுதி செய்ய விதை சட்டம், விதை விதிகள் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் விதை ஆய்வு பிரிவில் கடந்த 4 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 667 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து, 19 ஆயிரத்து 188 விதை மாதிரிகள் எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது, தரம் குறைவால் 831 விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முளைப்பு திறன் குறைபாடு காரணமாக 23 விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும், 296 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க