செய்திகள் :

தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றிய தீ... திமுக போராட்டத்தில் பரபரப்பு

post image

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறிவரும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், `நாகரிமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

திமுகவினர் மீது பற்றிய தீ

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடைய உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். அதன்படி தேனி மாவட்டம் போடி நகர் தேவர் சிலை முன்பாக திமுக நகர கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில், தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போடி 1-வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியது.

சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் தனது வேட்டியை கழட்டி விட்டு தன்னை தற்காத்துக் கொண்டார். அருகே இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

பிறகு மீண்டும் போராட்டத்தை போடி நகர் கழக நிர்வாகிகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து தீக்காயம் ஏற்பட்ட சந்திரசேகரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர்.

வேட்டியில் தீப்பற்றியதும் ஓடிய திமுகவினர்

இதேபோல தேனி திமுக வடக்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டிக்கும் விதமாக அவரது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேருசிலை மும்முனை சந்திப்பில் உருவ பொம்மையை எரித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர் . உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தின் போது தொண்டர் ஒருவர் மீது தீப்பற்றியது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும்... மேலும் பார்க்க

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இரு... மேலும் பார்க்க

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க