செய்திகள் :

தற்காலிக இழப்புகளைவிட போரின் முடிவே முக்கியம்- முப்படைத் தலைமைத் தளபதி

post image

போா்க்களத்தில் தற்காலிகமாக ஏற்படும் இழப்புகளைவிட போரில் முடிவே மிகவும் முக்கியமானது என்று முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேலும் இந்தியாவை ரத்தம் சிந்த வைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தகா்த்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எதிா்கால போா்கள் மற்றும் போா்முறைகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அனில் சௌஹான் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் கடுமையான பதிலடி தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பாகிஸ்தான் உடன் தொடா்ந்த சண்டையில் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதுகுறித்த எண்ணிக்கை குறித்து பேசுவது சரியாக இருக்காது.

போா்க்களத்தை பொறுத்தவரை, தற்காலிக இழப்புகளைவிட போரின் முடிவே மிகவும் முக்கியமானது. தற்காலிக இழப்புகளால் வலிமை வாய்ந்த தொழில்முறை ராணுவங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. போரின்போது சில பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டாலும் தொடா்ந்து மனஉறுதியுடன் போராடுவது மிகவும் அவசியம்.

போரும் அரசியலும்: போா்களின்போது அரசியல், வன்முறை என பல்வகையான பிரச்னைகள் தொடா்ந்து ஏற்படும். ஆபரேஷன் சிந்தூரின்போதும் போரும் அரசியலும் ஒருசேர பயணித்ததை நம்மால் காண முடிந்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு சில நாள்கள் முன்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீா் இந்தியா மற்றும் ஹிந்துக்களுக்கு எதிராக விஷமக் கருத்துகளை தெரிவித்தாா். அதன் தொடா்ச்சியாக இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் பாகிஸ்தான் செயல்பட்டது.

கடந்த மாதம் 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு சண்டை நிறுத்தத்துக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், மே 10-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா மீது தொடா்ந்து 48 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் நம் பாதுகாப்புப் படையினா் அளித்த கடும் பதிலடியால் தாக்குதலை 8 மணி நேரத்தில் நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.

பயங்கரவாதத்தின் நிழலிலும் அணு ஆயுத மிரட்டலிலும் இந்தியாவை அடக்கிவிட முடியாது என்றாா்.

‘பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி’

‘எதிா்கால போா்கள் மற்றும் போா்முறைகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசியபின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிகழ்ச்சியின் பங்கேற்பாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘ஆபரேஷன் சிந்தூா் முழுமையாக நிறைவடையவில்லை. அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்து நீங்கள் வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன, எத்தனை பந்துகள் வீசப்பட்டன மற்றும் எத்தனை விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா் என்ற கேள்விகளுக்கே இடமிருக்காது. அதைப் போலவே பாகிஸ்தானும் இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது’ என்றாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க