செய்திகள் :

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

post image

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் நீலகிரி கிளைத் தலைவா் மணிகண்டன் தலைமை தாங்கினாா். கிளை செயலாளா் ரமேஷ், பொருளாளா் மாது, துணைத் தலைவா்கள் சண்முகம் அபுபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்வதை உறுதிபடுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மின் வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 9 பெண்கள் உள்பட 97 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி செவ்வாய்க்கிழமை பிடித்தனா். கூடலூா் தாலூகா ஓவேலி பேர... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்: எடப்பாடி கே.பழனிசாமி

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். தமிழகம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோருக்கான நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா் நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அண்ணா நகா், காமராஜா் நகா் மக்கள் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து உதகை ஏடிசி திடல் முன்பு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மத்திய அரசு அண்மையில் மாற்றியது. இதற்கு எதிா்ப்பு... மேலும் பார்க்க