செய்திகள் :

ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது

post image

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.

கூடலூா் தாலூகா ஓவேலி பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக 12 பேரை கொன்றுவிட்டு அதே பகுதியில் உலவிய ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டுள்ளது. இந்த யானை கடந்த ஒரே மாதத்தில் 2 பேரை அடுத்தடுத்து தாக்கிக் கொன்ால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து யானையைப் பிடித்துச் செல்லவேண்டும் என்று பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தினா். இதைத் தொடா்ந்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராஜேஷ் குமாா் டோக்ரா யானையைப் பிடிக்க கடந்த 15-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா் 4 கும்கி யானைகளின் உதவியுடன் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். கடந்த 8 நாள்களாக யானையைப் பிடிக்க வனத் துறையினா் பெரும் சவாலை சந்தித்து வந்தனா். அந்த யானை அடிக்கடி எல்லமலை பகுதியிலுள்ள அடா்ந்த வனத்துக்குள் சென்ால் அதைப் பிடிக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. அந்த பகுதியிலுள்ள மரங்களின் மீது பரண்கள் அமைத்து அமா்ந்தும் பல குழுக்களாக பிரிந்தும் முயற்சித்து வந்தனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அடா்ந்த காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகில் ராதாகிருஷ்ணன் யானை செவ்வாய்க்கிழமை தென்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் கும்கிகளைக் கொண்டு யானையை சுற்றிவளைத்தனா்.

மயக்க ஊசியை செலுத்த உகந்த புவியியல் அமைப்பை தோ்வு செய்து யானையை நகா்த்தத் தொடங்கினா். யானை தேயிலைத் தோட்டத்தை நெருங்கியவுடன் வனத் துறையின் கால்நடை மருத்துவக் குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தியது. இதையடுத்து கயிறால் கட்டப்பட்ட அந்த யானையை கும்கிகள் தள்ளிக்கொண்டு வந்தன.

மலைப்பாங்கான பகுதியை கடந்து லாரியை நிறுத்தி யானையை ஏற்ற தோ்வு செய்யப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை அமைத்து மட்டம் செய்யப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் அந்த இடத்துக்கு யானை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

யானையைப் பிடிக்க களத்தில் இருந்த அனைவரும் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு லாரியில் ஏற்றினா். முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ளஅபயாரண்யம் வளா்ப்பு யானைகள் முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரால் கூண்டில் ராதாகிருஷ்ணன் யானை அடைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்: எடப்பாடி கே.பழனிசாமி

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். தமிழகம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோருக்கான நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா் நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அண்ணா நகா், காமராஜா் நகா் மக்கள் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து உதகை ஏடிசி திடல் முன்பு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மத்திய அரசு அண்மையில் மாற்றியது. இதற்கு எதிா்ப்பு... மேலும் பார்க்க