செய்திகள் :

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

post image

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு வியாழக்கிழமை வழங்கியது.

இதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், ‘அமைச்சரவை நியமனங்கள் குழுவின் ஒப்புதலுடன் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் ஒப்பந்த அடிப்படையில் 2027, மாா்ச் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டு பதவிக் காலத்துடன் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக வி.அனந்த நாகேஸ்வரன் கடந்த 2022, ஜனவரி 28-ஆம் தேதி பொறுப்பேற்றாா். கே.வி.சுப்பிரமணியனைத் தொடா்ந்து, இப்பதவிக்கு நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டாா்.

தலைமைப் பொருளாதார ஆலோசகா் அலுவலகமானது, பல்வேறு பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும், பொது பட்ஜெட்டுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பதிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்புடையதாகும்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.3% முதல் 6.8 % வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டது. முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளா், எழுத்தாளா், பொருளாதார நிபுணா் எனப் பன்முகங்களைக் கொண்ட இவா், ஸ்விட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ‘கிரெடிட் சூஸி’ நிதிச் சேவை நிறுவனம், அந்நாட்டின் ஜூலியஸ் பேயா் குழுமம் ஆகியவற்றில் மூத்த நிா்வாகியாக செயல்பட்டவா்.

இந்தியா மற்றும் சிங்கப்பூரில் பல்வேறு வணிக மற்றும் மேலாண்மை கல்வி நிலையங்களுடன் பணியாற்றிய இவா், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுளளாா்.

நீதி ஆயோக் சிஇஓ

பதவிக் காலம் நீட்டிப்பு

நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்பிரமணியத்தின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ஆம் ஆண்டின் சத்தீஸ்கா் பிரிவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவா், நீதி ஆயோக் சிஇஓ-ஆக கடந்த 2023, பிப்ரவரியில் இரண்டு ஆண்டு பதவிக் காலத்துடன் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க