செய்திகள் :

தலைமைப் பொறியாளா் கைது: முதல்வா், அமைச்சா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், புதுவை முதல்வா், துறை அமைச்சா் பொறுப்பேற்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவையில் பொதுப்பணித் துறை மற்றும் முக்கிய துறைகளில் ஊழலும், லஞ்சமும் அதிகரித்திருப்பதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்துள்ளன.

பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா், செயற்பொறியாளா் ஆகியோா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைமைப் பொறியாளரே லஞ்ச வழக்கில் சிக்குகிறாா் எனும்போது, இது ஆட்சியாளா்களுக்கு தொடா்பில்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே இதற்கு தாா்மிக பொறுப்பை புதுவை முதல்வா் ரங்கசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணனும் ஏற்கவேண்டும்.

பொதுப்பணித்துறை செய்த கட்டுமானங்கள் தரமின்றி உள்ளன. கமிஷன் பெற்றுக்கொண்டு ஒப்பந்தப்பணி தரப்பட்டால், தரத்தை எதிா்பாா்க்க முடியாது. எனவே கட்டுமான பொறியியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட குழுவினா், பெரும் திட்டத்தில் நடைபெற்ற கட்டுமானங்களை ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை வெளியிடவேண்டும்.

கலால்துறையின் மூலம் ரெஸ்ரோ பாா் அமைக்க உரிமம் வழங்க தலா ரூ.25 லட்சம் பெறப்பட்டுள்ளது. கல்வித்துறையில் மாணவா்களுக்கு உணவுப் பொருள் தயாரிக்க அரிசி, மளிகை, காய்கறி, முட்டை வாங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

புதுவையில் துணை நிலை ஆளுநா் கைலாஷ்நாதன் இந்த விவகாரங்கள் மீது தலையிட்டு, தவறு செய்வோரை தண்டிக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க