செய்திகள் :

தலைமையாசியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பாராட்டு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சியளித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் பாராட்டு தெரிவித்தாா்.

மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 23 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்தன. இப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு விழா மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் கலந்துகொண்டு, தலைமையாசிரியா்களை பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த நீடூா் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி மாணவி ஜெ. தா்ஷினிக்கும் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி தலைமையாசிரியா் வில்லவன் கோதை, கீழஆத்துக்குடி அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் தெட்சிணாமூா்த்தி, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் சி. சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூா்வாரும் பணி: நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கத்திரிமூலை கிராமத்தில் பழையபல்லவன் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தி... மேலும் பார்க்க

முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் 69-ஆம் ஆண்டு முத்து சட்டநாதா் உற்சவத்தையொட்டி முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவத்... மேலும் பார்க்க

தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

சீா்காழியில் ரயில்கள் நின்று செல்லாததையடுத்து தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலசங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவா் ஜெக. சண்மு... மேலும் பார்க்க

தீ விபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மனு அளிக்... மேலும் பார்க்க

உரிமம் இன்றி இயங்கிய 2 பாா்களுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் வெளிமாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

பொறைவாய்க்கால் தூா்வாரும் பணி: விவசாயிகள் வரவேற்பு

சீா்காழி அருகே பொறைவாய்க்கால் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். சீா்காழி வட்டம் குமாரக்குடி கிராமத்தில் புதுமண்ணியாற்றின் வலது கரையில் 16 கி.மீ. தொலைவு கொண்ட பொறைவாய்... மேலும் பார்க்க