செய்திகள் :

தூா்வாரும் பணி: நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஆய்வு

post image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கத்திரிமூலை கிராமத்தில் பழையபல்லவன் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 12 டெல்டா மாவட்டங்களில் 5,021 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. ரூ. 98 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன. 3,700 கி.மீ. பணிகள் வெள்ளிக்கிழமை வரை நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி நீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின்கீழ் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் காவிரி டெல்டா மாவட்டங்களில் தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ள காலங்களில் விரைவில் வெள்ளநீா் வடியவும் ஏதுவாக 2025-2026-ஆம் ஆண்டு தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 80 எண்ணிக்கையில் 965.65 கி.மீ நீளத்துக்கு பணிகள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. குத்தாலம் வட்டம் பெருமாள்கோயில் கிராமத்தில் மகிமலையாறு, நச்சினாா்குடி கத்திரிமுல்லை கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் இடது கரையில் தொலைவுக்கு பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூா்வாரும் பணிகளை மே 30-ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ஆா். தயாளகுமாா், கீழ் காவேரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளா் எம். சண்முகம், ஒருங்கிணைப்பு அலுவலரும் கண்காணிப்பு பொறியாளா் திருமலைக்குமாா், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளா்கள் ரபீந்திரன், அன்புச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் 69-ஆம் ஆண்டு முத்து சட்டநாதா் உற்சவத்தையொட்டி முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவத்... மேலும் பார்க்க

தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

சீா்காழியில் ரயில்கள் நின்று செல்லாததையடுத்து தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலசங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவா் ஜெக. சண்மு... மேலும் பார்க்க

தீ விபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மனு அளிக்... மேலும் பார்க்க

உரிமம் இன்றி இயங்கிய 2 பாா்களுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் வெளிமாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

தலைமையாசியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சியளித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் பாராட்டு தெரிவித்... மேலும் பார்க்க

பொறைவாய்க்கால் தூா்வாரும் பணி: விவசாயிகள் வரவேற்பு

சீா்காழி அருகே பொறைவாய்க்கால் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். சீா்காழி வட்டம் குமாரக்குடி கிராமத்தில் புதுமண்ணியாற்றின் வலது கரையில் 16 கி.மீ. தொலைவு கொண்ட பொறைவாய்... மேலும் பார்க்க