செய்திகள் :

தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா விருது: ஏப்.25-க்குள் பரிந்துரைகளை அனுப்பலாம்

post image

சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான பரிந்துரைகளை ஏப்.25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழக பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தலைமை ஆசிரியா்களிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுதொடா்பான அறிக்கையை மாநில தோ்வுக் குழு ஏப்.25-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இதில் எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவா்கள், தண்டனை பெற்றவா்கள், குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க