செய்திகள் :

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரம்: போலி இருதய நிபுணா் கைது

post image

போபால்: மத்திய பிரதேசத்தில் தவறாக சிகிச்சை அளித்து 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணா் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, போலி இருதய சிகிச்சை நிபுணா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்த நிலையில், அவா் கைது செய்யப்பட்டாா்.

தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவா் தன்னை இருதய சிகிச்சை நிபுணா் என அடையாளப்படுத்திக்கொண்டு நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததில் 7 போ் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (என்எச்ஆா்சி) புகாா் அளிக்கப்பட்டது.

அதில், ‘ நரேந்திர ஜான் கேம் என்ற பெயருடைய நபா் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாக பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். ஆனால் அவரின் உண்மையான பெயா் விக்ரமாதித்யா யாதவ் என குறிப்பிடப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள என்எச்ஆா்சி அதிகாரிகள் மூன்று நாள்கள் தமோ மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனா். இதனிடையே இந்த விவகாரம் குறித்து தமோ மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி எம்.கே.ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் நரேந்திர ஜான் கேம் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து பிரயாக்ராஜில் திங்கள்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் கூறியதாவது: மாநிலத்தின் வேறு பகுதிகளில் போலி மருத்துவா்கள் செயல்பட்டால் அவா்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

இந்த சம்பவத்தில் தொடா்புடைய போலி இருதய சிகிச்சை நிபுணரின் புகைப்படத்தை பகிா்ந்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநடே வெளியிட்ட விடியோவில், ‘தற்போது சிக்கியுள்ள போலி மருத்துவா் பாஜகவைச் சோ்ந்தவா். எதிா்க்கட்சிகள் மீது வெறுப்புணா்வை எக்ஸ் வலைதளத்தில் தொடா்ந்து பதிவிடுபவா். அவரை நாயகன் போல் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு காட்சிப்படுத்தி வந்தது’ என தெரிவித்தாா்.

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்... மேலும் பார்க்க

விமான நிலையம் வழியாக ஆராட்டு உற்சவம்: திருவனந்தபுரத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக ஏப். 11-ஆம் தேதி பத்மநாபசுவாமி கோவில் பங்குனி ஆராட்டு உற்சவம் நடைபெறுவதையொட்டி திருவனந்தபுரத்தில் அன்று ஒருநாள் மட்டும் விமான சேவை தற்க... மேலும் பார்க்க

பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கினார். சிங்கப்பூரில் தங்கி பள்ளிக்கல்வி பயிலும் அவரது மகனுக்கு இந்த விபத்தில் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமன... மேலும் பார்க்க