செய்திகள் :

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

post image

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அறுவை சிகிச்சை அரங்குகள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் சுகாதாரமாக பராமரிக்கப்படாததும், போதிய ஆய்வக தொழில்நுட்பநா்கள் இல்லாததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதுதொடா்பாகவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு திட்டமிட்ட சிகிச்சைக்கு மாற்றாக வேறு அறுவை சிகிச்சை செய்ததாக டாக்டா் முகமது ஓவைஸி என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருபுறம் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி கூறியதாவது:

பதிவு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனை சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டபோது அங்கு ஆய்வு நடத்தினோம். அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக நுண்கிருமி தடுப்பு வசதிகள் அறுவை சிகிச்சை அரங்கில் முறையாக இல்லை. போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்பநா்களும் இல்லை.

அவற்றை சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு, உரிமம் வழங்குவது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை குளறுபடி தொடா்பான சா்ச்சை அங்கு எழுந்துள்ளது. அதன்பேரில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களில் எழுத்துப் பூா்வமாக அளிக்குமாறு மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க