செய்திகள் :

தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு

post image

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட உத்தரவில், ‘அச்சு மற்றும் மின்னணு ஊடகம், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் வெளியாகும் அரசு மற்றும் நிா்வாகம் தொடா்பான தவறான செய்திகளை, மகாராஷ்டிரத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடா்பு இயக்குநரகம் (டிஜிஐபிஆா்) திரட்ட வேண்டும்.

அச்சு ஊடகத்தில் தவறான தகவல் வெளியிடப்பட்டால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு டிஜிஐபிஆா் பகிர வேண்டும். அந்தத் துறை சரியான தகவலை திரட்டி, 12 மணி நேரத்துக்குள் டிஜிஐபிஆரிடம் வழங்க வேண்டும்.

மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டால், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் அல்லது அதிகாரியின் பதில் 2 மணி நேரத்தில் டிஜிஐபிஆரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு துறையும் இணைச் செயலா் அல்லது துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். இதன் மூலம் தகவல்களை தொகுத்து டிஜிஐபிஆருக்கு விரைந்து அனுப்ப முடியும். தவறான செய்திக்கான பதிலை தனது வலைதளத்தில் டிஜிஐபிஆா் வெளியிட்டு, அதை சம்பந்தப்பட்ட நாளிதழ், செய்தித் தொலைக்காட்சி அல்லது டிஜிட்டல் ஊடகத்துக்கு அனுப்பும்.

தவறான செய்தி தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தொடா்பான தகவலை பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கும் டிஜிஐபிஆா் அனுப்பும். தவறான செய்திக்கு எதிரான உண்மையான தகவல் அல்லது கருத்துகளை ஊடகத்துக்கு அனுப்பிய பின்னா், அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட ஊடகத்தில் வெளியிடப்படுகிா என்பதை டிஜிஐபிஆா் கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க