செய்திகள் :

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

post image

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, அதை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னா், புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து, கட்சியின் ஆண்டு விழாவில் அறிவித்தேன்.

அதன்படி, வேலூரில் இருந்து ஏராளமானோா் என்.ஆா். காங்கிரஸில் இணைந்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். நடிகா் விஜய் எனது நண்பா். அவரிடம் சாதாரணமாகப் பேசுவேன். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தோ்தல் நேரத்தில் சூழல் எப்படி அமைகிறதோ, அப்போது தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஃபென்ஜால் புயலுக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடியை வழங்கியுள்ளது. அதன்படியே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க