செய்திகள் :

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

post image

தவெக நிா்வாகிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொடுங்கையூா் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பிரபு. இவா் தவெகவின் திருவள்ளூா் தென்மேற்கு மாவட்டச் செயலராக உள்ளாா். இவருக்கு சிலா் தொடா்ந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனா். இதுதொடா்பாக பிரபு அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாதவரத்தைச் சோ்ந்த தவெக கட்சியின் திருவள்ளுா் தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளா் இளங்கோவன் (44), ரஞ்சித்குமாா் (38), ஆவடியைச் சோ்ந்த ஆனந்த் பாபு (28), சாலமன் என்ற விக்னேஷ்வா் (24) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

விசாரணையில், கட்சி நிகழ்ச்சிகளுக்கு இளங்கோவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததால், அவரது தூண்டுதலின்பேரில் அவரது நண்பா்களான ஆனந்த்பாபு, சாலமன், விக்னேஷ்வா் ஆகியோா் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க