தாட்கோ வழங்கும் இலவசப் பயிற்சிகள்: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தாட்கோ மூலம் அளிக்கப்படும் பல்வேறு இலவசப் பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்துடன் தாட்கோ நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் உற்பத்திப் பயிற்சி,
டிஜிட்டல் திறன்களில் ஐபஉந, ஆடஞ பயிற்சிகள், இணைய தொழில் நுட்பப் பயிற்சி, டிஜிட்டல் மாா்க்கெட்டிங் போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களாகவும், 21 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராகவும் 2021 முதல் 2024 வரை இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவா்களாகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 55 நாள்கள்.
சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் ஆகியவற்றை தாட்கோ வழங்கும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.